என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை விவகாரம்"

    • இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என தகவல்
    • தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் பங்கேற்பு.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா கோரிக்கையை ஏற்று மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த கூட்டம் இரண்டு முறை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், இன்று டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.
    • இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது.

    மைசூரு:

    கர்நாடகத்தில் உள்ள அணைகளில் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் மைசூருவில் உள்ள கபினி அணைகள் முக்கியமானவை. குடகு மாவட்டம் மற்றும் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இந்த இரு அணைகளின் நீர் தான் காவிரி நதிநீர் ஒப்பந்தப்படி தமிழ்நாடு-கர்நாடகம் இடையே பகிர்ந்து வரப்படுகிறது.

    இந்த நிலையில் இரு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வந்தது. இதனால் அணைகளுக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்தது. மழை தீவிரம் அடைந்ததால் அணைக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீதம் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், நீர்மட்டம் உயர்ந்ததாலும் அணைகளின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டது. கே.ஆர்.எஸ். அணையில் திறந்த நீர் காவிரியில் பாய்ந்தோடியது.

    இரு ஆறுகளும் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா அருகே கூடலுசங்கமாவில் இணைந்து அகன்ற காவிரியாக சாம்ராஜ்நகர் வழியாக தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் ஒனேக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் அதிகபட்சமாக தமிழகத்திற்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையும், கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையும் முழுகொள்ளளவை எட்டி நிரம்பின.

    நடப்பு ஆண்டில் ஜூலை 2-வது வாரத்திலேயே இரு அணைகளும் நிரம்பிவிட்டன. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் இரு அணைகளும் ஜூலையில் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அணைகள் நிரம்பியதை தொடர்ந்து வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அணைகளில் முதல்-மந்திரி பாகினா பூஜை சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு அணைகள் நிரம்பியதை தொடர்ந்து நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இரு அணைகளிலும் பாகினா பூஜை நிறைவேற்றினார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டரில் மைசூரு சென்றார். அங்கிருந்து அவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்றார். மேலும் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து சாமுண்டிஅம்மனுக்கும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

    பின்னர் அங்கிருந்து காரில் அவர் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா எலச்சினஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு சென்றார். அங்கு வருணபகவானுக்கு சிறப்பு பூஜை செய்த பசவராஜ்பொம்மை, பாகினா பூஜை செய்து வழிபட்டார். அதாவது, ஒரு முறத்தில் நவதானியங்கள், துணி, மஞ்சள், வளையல், பூ, குங்குமம், பழங்கள், தேங்காய், வெற்றிலை,பாக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து மற்றொரு முறத்தால் மூடி அதனை அணை நீரில் விடுவதே பாகினா என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நவதானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய முறத்தை பசவராஜ்பொம்மை அணை நீரில் விட்டு வழிபட்டார்.

    அங்கு பூஜையை முடித்த அவர் காரில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். அங்கும் அவர் அணை நிரம்பியதால் வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    பின்னர் பாகினா பூஜையை அவர் நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சிகளின் போது முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன், அவரது மனைவி சென்னம்மா, நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூரு கலெக்டர் பகாதி கவுதம், மண்டியா மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, கலெக்டர் அஸ்வதி மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக கபினி அணையில் பூஜை முடித்த பிறகு பசவராஜ்பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வட கர்நாடகத்தில் கிருஷ்ணா கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தென்கர்நாடகத்தில் காவிரி, கபிலா, ஹேமாவதி, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, துங்கப்பத்ரா உள்ளிட்ட அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளனர். இதனால் வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து, அணைகளில் பூஜை செலுத்துகிறேன். சாமுண்டீஸ்வரி வர்தந்தி உற்சவத்தில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தேன். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்காக அம்மனிடம் பிரார்த்தனை செய்துள்ளேன்.

    இந்த ஆண்டு மாநிலத்தில் நீர்பிரச்சினை வராது. விவசாயிகளுக்கு அனுகூலம் ஆகும் வகையில் பாசன கால்வாய்களை தூர்வாரி, விளை நிலங்களுக்கு தடையின்றி பாசன நீர் சுலபமாக செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டு வளர்ச்சி அடைய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது.

    கபினி அணையின் முன் பகுதியில் இருக்கும் காலியான இடத்தில் அழகான பூங்கா அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சார்பில் இந்த பூங்காவை அமைப்பதா அல்லது தனியார் கட்டுப்பாட்டில் இந்த பூங்காவை அமைப்பதா என ஆலோசித்து வருகிறோம். இந்த இடத்தை சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கர்நாடக மாநிலத்திலேயே மைசூரு மாவட்டத்தில் உள்ள எச்.டி. கோட்டை தாலுகா மிகவும் பின்தங்கிய, வளர்ச்சி காணாமல் இருக்கும் தாலுகாவாக உள்ளது என பெயர் இருக்கிறது. அதை மாற்றுவதற்காக இந்த தாலுகாவை வளர்ச்சி அடைய வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டியாவில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மேகதாது திட்டம் தொடர்பான வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தீர்ப்பு வெளியானதும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். அதன் பிறகு திட்ட பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்தால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். இந்த திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசன திட்டங்களால் மைசூரு, மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

    ங்கள் அரசு விவசாயிகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிறது. மண்டியா பகுதியின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றினால் நம்மை மக்கள் நினைவில் வைத்து கொள்வார்கள்.

    மண்டியா சர்க்கரை ஆலையில் உற்பத்தி பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கப்படும். இதற்கு தேவையான செலவுக்கு அரசே நிதி ஒதுக்கும். இதனால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கர்நாடகத்தில் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. ஆறுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் கலாசாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய காவிரி ஆற்றை நாம் பயன்படுத்தி கொள்வது நமது கடமை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    மேகதாது அணை, கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ளது. இந்த அணை ரூ.9 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகம், மத்திய அரசு மற்றும் மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுமதி கேட்டு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும் முடிவில் தீவிரமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் இந்த அணை திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடகம் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் அறிய விரும்புகிறோம்.
    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்டில் இன்று நீதிபதி கன்வெல்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் கூறியதா வது:-

    காவிரி நதிநீர் பங்கீட்டை கூட கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சரியாக செயல்படுத்துவதில்லை. இந்த சூழலில் மேகதாது அணைகட்டியதற்கு பிறகு உரிய நீரை வழங்குவோம் என்பது போன்ற கர்நாடக அரசின் வாக்குறுதிகளை நாங்கள் நம்பமுடியாது.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக அரசு வக்கீல் வாதாடுகையில், 'காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றிய விவரங்களை பதிலாக அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற வெள்ளிக்கிழமை காவிரி ஆணைய கூட்டம் நடைபெறலாம். ஆனால் மேகதாது அணை விவகாரம் பற்றி அதில் விவாதிக்க தடை விதிக்கிறோம்.

    2018-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் மாதம் 17-ந்தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜூன் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டம் மீண்டும் ஜூலை 6-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6-ந்தேதியும் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    • மேகதாது அணை திட்டம் தொடர்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விசாரிக்க தமிழகம் எதிர்ப்பு.
    • தமிழக மனுக்களை அவசரமாக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

    தமிழக காவிரி தொழில்நுட்பப்பிரிவின் துணைத்தலைவர் எம்.செல்வராஜு சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மேகதாது அணை திட்டம் தொடர்பாக, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவையோ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் மனுக்களை அவசரமாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜராகிய மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி முறையிட்டார். இதற்கு கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆட்சேபித்தார். தமிழக அரசின் முறையீட்டை பரிசீலித்த நீதிபதிகள், மேகதாது அணை விவகாரம் தொடர்புடைய மனுக்களை வருகிற 19-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தனர்.

    • காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

    இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

    • மாநில, மத்திய அரசின் அனுமதியை பெறாமல் கர்நாடகா அணையைக் கட்ட முடியாது.
    • காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்.

    முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகளில் ஒன்று காவிரிப் பிரச்னை. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரில் முழு உரிமை இருக்கிறது. எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுகஅரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்! வாதாடும்! என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தனது உரிமையை நிலைநாட்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதன்படிதான் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது.

    அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிற பொழுது எல்லாம், பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கிவிடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று

    செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்னால், கர்நாடக அரசு இதில் அதிகமான முனைப்பைக் காட்டியது.

    காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டுமென்று சொன்னார்கள். உடனடியாக, நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கூடாது அப்படி என்று வலியுறுத்தி, வற்புறுத்தி பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர், டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து, மேகதாது அணைக்கு ஆதரவா பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.

    உடனடியாக, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் அத்துப்பிடி அவருக்கு. எந்த நேரத்தில், எதைக் கேட்டாலும், தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பிக் கேட்டால் கூட அந்த காவிரிப் பிரச்சனையில் பட்டு, பட்டு என்று அப்படி Finger tips-ல் வைத்திருப்பார். அவர்தான் அன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்.

    ஆகவே அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்து, ஒரு குழு அமைத்து, அந்தக் குழு டெல்லிக்கு போனது. அவருடைய தலைமையில் தான் போனார்கள். மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் போய் சந்தித்து நமது தரப்பினுடைய வாதங்களை வலியுறுத்தி சொல்லியிருந்தார்கள்.

    ஆகவே டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு உடன்பாடு இல்லாமல், எந்தக்காரியத்தையும் காவிரிப் பிரச்னையில் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடம் வாக்குறுதி பெற்று வந்திருக்கிறது நம்முடைய குழு.

    அந்த உறுதியைப் பெற்றுத்தான் அண்ணன் துரைமுருகன் சென்னைக்கு வந்தார்கள். அதேபோல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மாட்டோம் அப்படி என்று அந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    இப்போது தற்சமயத்தில், கூட்ட விவரத்தில் இருந்து மேகதாது விஷயத்தை நீக்கி விட்டார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, தொடர்புடைய மாநிலத்தின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதியையும் பெறாமல் அணையைக் கட்ட முடியாது.

    ஆகவே, கர்நாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், மத்திய அரசு தரக்கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் திமுக அரசு. நிதி உரிமை வேண்டும், சமூகநீதி உரிமை வேண்டும், காவிரி உரிமை வேண்டும், கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுப்பதால், இது ஏதோ மத்திய அரசுக்கு எதிரான குரலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

    ஒரு சிலரால். இல்லை இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே. அப்படித்தான் திமுக எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • மத்திய மந்திரி உறுதி மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.
    • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது.

    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் திட்டத்துக்காக அந்த அணை கட்டப்படுவதாக அந்த அரசு கூறுகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி, காவிரி பாயும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதங்கள் எழுதியுள்ளது.

    இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழு டெல்லி நேற்று சென்றது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, டெல்லியில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு, மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்தது. அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர் மத்திய மந்திரியுடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், வைகோ, தம்பிதுரை, ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கு.செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி, நயினார் நாகேந்திரன், தி.ராமச்சந்திரன், பி.சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், எம்.ஜெகன்மூர்த்தி மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவிரி தொழில் நுட்பக்குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி வருமாறு:-

    மத்திய மந்திரி உறுதி மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத்துடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம்.

    ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வக்கீல்களிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

    மத்திய மந்திரி எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை அவர்கள் உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்று வலியுறுத்தல்
    • மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தமிழக குழு வலியுறுத்தல்

    புதுடெல்லி:

    தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர். பின்னர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வைகோ, மு. தம்பித்துரை, ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, கு. செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, நயினார் நாகேந்திரன், தி.இராமசந்திரன், பி. சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், எம். ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். சந்தீப் சக்சேனா. உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்திற்கு பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது. மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என வழக்கறிஞரிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

    ஜல்சக்தி துறை அமைச்சர் அவர்கள் எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
    • மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

    புதுடெல்லி:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்று தமிழகம் தெரிவித்தது.

    இதை வலியுறுத்தி சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது. காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி  ஆலோசிக்க கூடாது என்பதை மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் குழு நேற்று டெல்லி சென்றது.

    இக்குழுவினர், மத்திய மந்திரியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி கர்நாடகம் விண்ணப்பம் செய்தது.

    அந்த விண்ணப்பத்தை பரிசீலனை பட்டியலில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் துறை நீக்கி உள்ளது.

    விரிவான அறிக்கையை ஜல்சக்தி துறை, காவிரி ஆணையம் இறுதி செய்ய வேண்டும். இறுதி செய்தால் மட்டும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முடிவு எட்டிய பிறகு விண்ணப்பத்தை பரிசீலிக்க சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 23-ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    • காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஜூன் 23-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் கூறியிருந்தார். இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம், இது தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பது தவறானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவேரி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மேட்டூர் அணையை ஆய்வு செய்துவிட்டு, மாலையில் கல்லணைக்கு வந்து ஆற்றின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    ஆய்விற்குப் பிறகு பேட்டி அளித்த காவேரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், மேகதாது அணை குறித்து 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை ஆணையக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று கூறுவதை தவறு என்றும், தமிழ்நாடு அரசிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இவ்வாறு பேட்டி அளித்த ஆணையத்தின் தலைவர், காவேரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் தங்கள் கடமை என்றும் கூறி இருக்கிறார். அதாவது, ஒருபுறம் மேகதாது அணை குறித்து காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறிவிட்டு மறுபுறம் நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவதுதான் எங்கள் கடமை என்று கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீர்ப்பங்கீட்டை செயல்படுத்துவது தான் காவேரி மேலாண்மை வாரியத்தின் பணி என்று அதற்கான ஆய்வு வரம்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, மேகதாது அணை குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி அளிக்கிறதா என்பதைத்தான் காவேரி மேலாண்மை வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் கூறுவது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது.

    காவேரி மேலாண்மை வாரியம் தனக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படவும், மேகதாது அணை குறித்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவேரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×